|
|||||
நாமக்கல்லில் மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கண்காட்சி |
|||||
நாமக்கல்லில் மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கண்காட்சி டிசம்பர் 25-ம் தேதி 3 நாட்கள் நடைபெற்றது.
S.S.நேச்சுரல் ஃபைபர் யூனிட், மாயா கீரின்ஸ் நிறுவனம், பசுமை நாமக்கல், ஹோட்டல் சனு இண்டர்நேஷனல், பண்டமாற்று (தற்சார்பு கிராம அங்காடி) இணைந்து மகளிர் குழுக்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் இயற்கையான வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கண்காட்சி நடைபெற்றது.
500க்கு மேற்பட்ட பாரம்பரிய இயற்கைப் பொருட்கள்
நாமக்கல் நகரில் சேலம் சாலையில் உள்ள ஹோட்டல் சனு இண்டர்நேஷனனில் டிசம்பர் 25 ந் தேதி முதல் 26 - 27 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற இக்கண்காட்சியை நாமக்கல் சட்ட மன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம் துவங்கி வைத்தார். பசுமை நாமக்கல் தலைவர் திரு பசுமை சத்திய மூர்த்தி அவர்கள் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவர் திரு.ஜெயகுமார் அவர்கள் குத்து விளக்கு ஏற்றிச் சிறப்பித்தனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை S.S. நேச்சுரல் பைபர் யூனிட் சுகந்தி பசுமை நாமக்கல் செயலாளர் பசுமை மா . தில்லை சிவக்குமார் ஏற்பாடு செய்து இருந்தனர். தமிழகம் முழுவதும் இருந்து உழவர்கள் மகளிர் குழுக்கள் 500க்கு மேற்பட்ட பாரம்பரிய இயற்கைப் பொருட்களைக் காட்சி படுத்தினர் அனைத்துத் தரப்பினும் வருகை தந்து பார்வையிட்டு, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கிச்சென்றனர்.
தற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்பிட உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்க , கலப்படம் இல்லாத கிராமத்தில் தயாரிக்கப்படும் வீட்டு உபயோகப் பொருள்களைப் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
-பசுமை தில்லை சிவக்குமார் , மாநில ஒருங்கிணைப்பாளர், Rural Vision Foundation பண்டமாற்று (தற்சார்பு கிராம அங்காடி) |
|||||
by Kumar on 27 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|