இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈ.வது போன்ற பெருமையுடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
வைத்துக்கொண்டே கேட்பவர்களுக்கு இல்லையென்று சொல்லுவதைக் கனவிலும் அறியாதவர்களிடத்தில், ஒருவன் சென்று தானம் கேட்பதை, (அவர்கள் அவன் தமக்குப் புண்ணியத்தைத் தானம்) கொடுக்க வந்ததாகவே வரவேற்பார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தம்மிடம் இருப்பதைக்கனவிலும் மறைத்தலை அறியாதாரிடம் சென்று ஒன்றனை யாசித்தல், வறியவர்கள் ஈதலே போன்றதாகும்.
Translation
Like giving alms, may even asking pleasant seem,
From men who of denial never even dream.
Explanation
To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself).