காணாச் சினத்தான்-செய்திகளின் உண்மையையும் பிறர் அருமை பெருமைகளையும் பாராமைக் கேதுவான கடுஞ் சினத்தனாகவும்; கழிபெருங் காமத்தான்-கரை கடந்த பெண்ணாசையனாகவும் இருப்பவனது; பேணாமை பேணப்படும்-பகைமை விரும்பிக் கொள்ளப்படும். காணாச் சினத்தாற் கண்ணன்ன கேளிரையும் மாபெரு வலியரையும் பகைத்துக் கொள்ளுதலாலும், கழிபெருங் காமத்தாற் பெண்ணின் வாயிலாக எளிதாய்க் கொல்லப்படுதலாலும், இவ்விரு குணங்களையுமுடையான் தானே தன் அழிவைத் தேடிக் கொள்ளுதல் பற்றிப் ’பேணாமை பேணப்படும்’ என்றார். ’காணா’ ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
கலைஞர் உரை:
சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.
சாலமன் பாப்பையா உரை:
நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
கண் மூடித்தனமாகக் காரணமின்றிக் கோபிக்கிறவனும் மிதமிஞ்சிய காம இச்சை உள்ளவனும் 'பகைமை' என்ற தீமையினால் கொண்டாடப்படுகிறவர்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தன்னையும் பிறனையும் அறிந்து கொள்ள முடியாத பெரும் கோபத்தினைக் கொண்டவனும் மிகுந்து வளரும் காமத்தினையும் உடையவன் எவனோ அவனு டைய பகைமையினைப் பகைவர்கள் விரும்பிக் கொள்ளு வார்கள்.
Translation
Blind in his rage, his lustful passions rage and swell;
If such a man mislikes you, like it well.
Explanation
Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.