முற்றியும்-வெளிப்போக்கிற்கும் உட்புகவிற்கும் இடமில்லாவாறு நெருங்கி மதிலைச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும்-அங்ஙனம் சூழாது மதிலின் இளந்த இடம்நோக்கி ஒன்றுதிரண்டு முனைந்து பொருதும்; அறைப்படுத்தும்-அமைச்சரையும் படைத்தலைவரையும் அவர்க்கு வேண்டியவரை விடுத்துப் பெறும் பொருள் கொடுத்து வயப்படுத்திக் கோட்டைவாயிலைத் திறக்கச் செய்தும்; பற்றற்கு அரியது-உழிஞையாராற் கைப்பற்ற முடியாததே; அரண்-சிறந்த கோட்டை யரணாவது. இம்மூன்று போர்வலக்காரங்களுள்ளும், முதலது மதிற்சிறப்பாலும், இரண்டாவது நல்லாளாலும், மூன்றாவது அதிகாரிகளின் நேர்மையாலும், வாயாவாம். அறைப் படுத்தலெனினும் அறைபோக்குதலெனினும் கீழறுத்தலெனினும் ஒன்றே. கையூட்டாற் காட்டிக் கொடுக்கச் செய்தல் என்பது இவற்றின் பொருள்.
கலைஞர் உரை:
முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(யுத்தம் மூண்டு முற்றுகை வந்துவிட்டால்) முற்றுகை செய்யும் பகைவர்கள் நெருங்க முடியாதபடி அவர்களை ஓடச் செய்து, உள்ளிருப்பவர்கள் இருக்கும் இடத்தைப் பகைவர்கள் அறிய முடியாதபடி மறைக்கக்கூடியதாகி, பகைவரால் கைப்பற்ற முடியாத உபாயங்கள் அமைந்ததே கோட்டை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
போக்குவரவு ஒழியும் வகையில் நெருங்கிச் சூழ்ந்தும், அவ்வாறு சூழாமல் நெகிழ்ந்தபோது இடம் நோக்கி ஒருமுகமாய்ப் போர் செய்தும், உள்ளிருப்போரை அவரைத் தெரிந்தோரால் கீழறுத்துத் திறப்பித்தும் புறத் தோரால் கொள்ளுதற்கு அரிதானதே அரணாகும்.
Translation
A fort should be impregnable to foes who gird it round,
Or aim there darts from far, or mine beneath the ground.
Explanation
A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.