LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இரு அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, 2 அமெரிக்கர்களுக்குக் கிடைத்து உள்ளது.

புதிய கண்டுபிடிப்புகளையும், சுற்றுச்சூழலையும் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைத்தமைக்காக அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகிய பொருளாதார நிபுணர்களுக்கு பொருளாதாரத்துக்கான நிகழாண்டின் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பை  வெளியிட்டு, நோபல் பரிசுக்கான  தேர்வுக் குழு கூறியதாவது:
பொருளாதார வளர்ச்சியை நிலையான வளர்ச்சியாகவும், நீண்ட கால வளர்ச்சியாகவும் ஆக்குவது எப்படி என்ற சவாலுக்கு தீர்வு அளித்ததற்காக பேராசிரியர்கள் வில்லியமும், பால் ரோமரும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழலுடனும், புத்தாக்கச் சிந்தனைகளுடனும் சந்தைப் பொருளாதாரத்தை இணைத்ததன் மூலம், பொருளாதாரப் பகுப்பாய்வின் எல்லையை இந்த இருவரும் விரிவுபடுத்தி இருக்கிறார்கள். இவர்களில் வில்லியம் நார்தாஸ், பருவநிலை மாறுபாடு என்ற முக்கியப் பிரச்னையை பொருளாதாரத்தோடு இணைத்துள்ளார்.

பால் ரோமரைப் பொறுத்தவரை, தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளை பொருளாதார உத்திகளுடன் இணைத்துள்ளார் என்று நோபல் தேர்வுக் குழு குறிப்பிட்டு உள்ளது.

இருவரையும் பற்றிய விவரங்கள் வருமாறு:
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரான வில்லியம், தற்போது அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பொருளாதாரம் குறித்து இதுவரை 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.

உலக வங்கியின் முதுநிலை துணைத் தலைவராக கடந்த ஜனவரி மாதம் வரை பொறுப்பு வகித்த ரோமர், தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவர், அமெரிக்காவில் உள்ள பிலிப் எக்ஸடர் அகாதெமியில் பட்டம் பெற்றவர்.

by Mani Bharathi   on 09 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.