LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு திருக்குறள் எழுதும் தண்டனை

 

தண்டனை என்பது குற்றங்களை தடுப்பதற்குத்தான். குற்றத்துக்கு தண்டனை     பெற்ற நபர் தனது தண்டனை காலத்தில் தான் செய்த தவறை திருத்திக்கொள்ளவும், இனி அதுபோன்ற தவறுகளும், குற்றங்களை மீண்டும் செய்யாதவாறு பக்குவப்படவும், தன்னை    தானே வருந்திக்கொள்ளவும் வாய்ப்பாகிறது. 
**************************************
அப்படி தண்டனை கொடுக்கும் நபர்களை பொருத்தே தண்டனைகள் வேறுபடுகின்றன. சிலர் வேடிக்கையான, விநோதமான, நகைச்சுவை பொருந்தத்தக்க தண்டனைகளை வழங்குவார்கள். சில வழக்குகளில் சில நீதியரசர்கள் சம்பந்தப்பட்ட நபரை நாளெல்லாம் நீதிமன்றத்திலேயே அமரச்செய்துள்ளனர். அல்லது அவர் சார்ந்த பகுதியில் தூய்மை பணிகளை செய்ய அறிவுறுத்துவர்.
*********************************
அப்படி ஒரு நூதன தண்டனையோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி தமிழ் மொழி மீதான பற்றை ஊட்டவும் சீர்திருத்த தண்டனை வழங்கி ஒட்டுமொத்த தமிழினத்தையும் தன்    பால் ஈர்த்துள்ளார் ஒருவர். சட்டம் ஒழுங்கை சீரமைக்கவும், போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் காவல்துறையில் சேவையாற்றி வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்தான் அந்த ஈர்ப்புக்கு சொந்தக்காரர். அப்படி அவர் என்ன தண்டனை    வழங்கிவிட்டார் என்பதுதானே உங்கள் கேள்வி. ஆம்.....தான் பணிசெய்யும் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை திருக்குறள் எழுத வைக்கிறார். இதுதான் அவர் கொடுக்கும் நூதன தண்டனை. இதை தண்டனை என்பதை விட விழிப்புணர்வுதான் என கூறவேண்டும்.
****************************************  
திருவாரூர் புல்லவராயன்குடிக்காட்டை மாவட்டம் சேர்ந்தவர் நாவுக்கரசன். இவர் திருச்சி பெரம்பலூர் டவுன் போக்குவரத்து காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய போது இரு சக்கர வாகனத்தில் கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்காமல் அவர்களிடம் பேப்பர் பேனா கொடுத்து 10 திருக்குறளை எழுத சொல்லி நூதன தண்டனையை கொடுக்கிறார். 10 திருக்குறளையும் எழுத்துப் பிழை இன்றி எழுதினால் அபராதம் விதிக்கப்படுவதில்லை. அதோடு ஹெல்மெட் அணிவதன் மாணவர்களை நாவுக்கரசன். அவசியத்தைக் கூறி அனுப்பி வைக்கிறார்.
******************************************
10 குறளை எழுதாதவர்களுக்கு ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கிறார். இதில் சிலர் திருக்குறளை எழுதிக் கொடுத்துவிட்டு செல்கின்றனர். சிலர்  அபராதம் செலுத்திவிட்டு செல்கின்றனர். 

தண்டனை என்பது குற்றங்களை தடுப்பதற்குத்தான். குற்றத்துக்கு தண்டனை     பெற்ற நபர் தனது தண்டனை காலத்தில் தான் செய்த தவறை திருத்திக்கொள்ளவும், இனி அதுபோன்ற தவறுகளும், குற்றங்களை மீண்டும் செய்யாதவாறு பக்குவப்படவும், தன்னை    தானே வருந்திக்கொள்ளவும் வாய்ப்பாகிறது. 

தன் பால் ஈர்த்துள்ளார் ஒருவர்

அப்படி தண்டனை கொடுக்கும் நபர்களை பொருத்தே தண்டனைகள் வேறுபடுகின்றன. சிலர் வேடிக்கையான, விநோதமான, நகைச்சுவை பொருந்தத்தக்க தண்டனைகளை வழங்குவார்கள். சில வழக்குகளில் சில நீதியரசர்கள் சம்பந்தப்பட்ட நபரை நாளெல்லாம் நீதிமன்றத்திலேயே அமரச்செய்துள்ளனர். அல்லது அவர் சார்ந்த பகுதியில் தூய்மை பணிகளை செய்ய அறிவுறுத்துவர்.

அப்படி ஒரு நூதன தண்டனையோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி தமிழ் மொழி மீதான பற்றை ஊட்டவும் சீர்திருத்த தண்டனை வழங்கி ஒட்டுமொத்த தமிழினத்தையும் தன்    பால் ஈர்த்துள்ளார் ஒருவர். சட்டம் ஒழுங்கை சீரமைக்கவும், போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் காவல்துறையில் சேவையாற்றி வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்தான் அந்த ஈர்ப்புக்கு சொந்தக்காரர். அப்படி அவர் என்ன தண்டனை    வழங்கிவிட்டார் என்பதுதானே உங்கள் கேள்வி. ஆம்.....தான் பணிசெய்யும் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை திருக்குறள் எழுத வைக்கிறார். இதுதான் அவர் கொடுக்கும் நூதன தண்டனை. இதை தண்டனை என்பதை விட விழிப்புணர்வுதான் என கூறவேண்டும்.

சிலர்  அபராதம் செலுத்திவிட்டு செல்கின்றனர்

திருவாரூர் புல்லவராயன்குடிக்காட்டை மாவட்டம் சேர்ந்தவர் நாவுக்கரசன். இவர் திருச்சி பெரம்பலூர் டவுன் போக்குவரத்து காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய போது இரு சக்கர வாகனத்தில் கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்காமல் அவர்களிடம் பேப்பர் பேனா கொடுத்து 10 திருக்குறளை எழுத சொல்லி நூதன தண்டனையை கொடுக்கிறார். 10 திருக்குறளையும் எழுத்துப் பிழை இன்றி எழுதினால் அபராதம் விதிக்கப்படுவதில்லை. அதோடு ஹெல்மெட் அணிவதன் மாணவர்களை நாவுக்கரசன். அவசியத்தைக் கூறி அனுப்பி வைக்கிறார்.

10 குறளை எழுதாதவர்களுக்கு ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கிறார். இதில் சிலர் திருக்குறளை எழுதிக் கொடுத்துவிட்டு செல்கின்றனர். சிலர்  அபராதம் செலுத்திவிட்டு செல்கின்றனர். 

 

by Kumar   on 20 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு
சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும்  திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.