|
|||||
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு திருக்குறள் எழுதும் தண்டனை |
|||||
தண்டனை என்பது குற்றங்களை தடுப்பதற்குத்தான். குற்றத்துக்கு தண்டனை பெற்ற நபர் தனது தண்டனை காலத்தில் தான் செய்த தவறை திருத்திக்கொள்ளவும், இனி அதுபோன்ற தவறுகளும், குற்றங்களை மீண்டும் செய்யாதவாறு பக்குவப்படவும், தன்னை தானே வருந்திக்கொள்ளவும் வாய்ப்பாகிறது.
**************************************
அப்படி தண்டனை கொடுக்கும் நபர்களை பொருத்தே தண்டனைகள் வேறுபடுகின்றன. சிலர் வேடிக்கையான, விநோதமான, நகைச்சுவை பொருந்தத்தக்க தண்டனைகளை வழங்குவார்கள். சில வழக்குகளில் சில நீதியரசர்கள் சம்பந்தப்பட்ட நபரை நாளெல்லாம் நீதிமன்றத்திலேயே அமரச்செய்துள்ளனர். அல்லது அவர் சார்ந்த பகுதியில் தூய்மை பணிகளை செய்ய அறிவுறுத்துவர்.
*********************************
அப்படி ஒரு நூதன தண்டனையோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி தமிழ் மொழி மீதான பற்றை ஊட்டவும் சீர்திருத்த தண்டனை வழங்கி ஒட்டுமொத்த தமிழினத்தையும் தன் பால் ஈர்த்துள்ளார் ஒருவர். சட்டம் ஒழுங்கை சீரமைக்கவும், போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் காவல்துறையில் சேவையாற்றி வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்தான் அந்த ஈர்ப்புக்கு சொந்தக்காரர். அப்படி அவர் என்ன தண்டனை வழங்கிவிட்டார் என்பதுதானே உங்கள் கேள்வி. ஆம்.....தான் பணிசெய்யும் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை திருக்குறள் எழுத வைக்கிறார். இதுதான் அவர் கொடுக்கும் நூதன தண்டனை. இதை தண்டனை என்பதை விட விழிப்புணர்வுதான் என கூறவேண்டும்.
****************************************
திருவாரூர் புல்லவராயன்குடிக்காட்டை மாவட்டம் சேர்ந்தவர் நாவுக்கரசன். இவர் திருச்சி பெரம்பலூர் டவுன் போக்குவரத்து காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய போது இரு சக்கர வாகனத்தில் கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்காமல் அவர்களிடம் பேப்பர் பேனா கொடுத்து 10 திருக்குறளை எழுத சொல்லி நூதன தண்டனையை கொடுக்கிறார். 10 திருக்குறளையும் எழுத்துப் பிழை இன்றி எழுதினால் அபராதம் விதிக்கப்படுவதில்லை. அதோடு ஹெல்மெட் அணிவதன் மாணவர்களை நாவுக்கரசன். அவசியத்தைக் கூறி அனுப்பி வைக்கிறார்.
******************************************
10 குறளை எழுதாதவர்களுக்கு ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கிறார். இதில் சிலர் திருக்குறளை எழுதிக் கொடுத்துவிட்டு செல்கின்றனர். சிலர் அபராதம் செலுத்திவிட்டு செல்கின்றனர்.
தண்டனை என்பது குற்றங்களை தடுப்பதற்குத்தான். குற்றத்துக்கு தண்டனை பெற்ற நபர் தனது தண்டனை காலத்தில் தான் செய்த தவறை திருத்திக்கொள்ளவும், இனி அதுபோன்ற தவறுகளும், குற்றங்களை மீண்டும் செய்யாதவாறு பக்குவப்படவும், தன்னை தானே வருந்திக்கொள்ளவும் வாய்ப்பாகிறது. தன் பால் ஈர்த்துள்ளார் ஒருவர் அப்படி தண்டனை கொடுக்கும் நபர்களை பொருத்தே தண்டனைகள் வேறுபடுகின்றன. சிலர் வேடிக்கையான, விநோதமான, நகைச்சுவை பொருந்தத்தக்க தண்டனைகளை வழங்குவார்கள். சில வழக்குகளில் சில நீதியரசர்கள் சம்பந்தப்பட்ட நபரை நாளெல்லாம் நீதிமன்றத்திலேயே அமரச்செய்துள்ளனர். அல்லது அவர் சார்ந்த பகுதியில் தூய்மை பணிகளை செய்ய அறிவுறுத்துவர். அப்படி ஒரு நூதன தண்டனையோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி தமிழ் மொழி மீதான பற்றை ஊட்டவும் சீர்திருத்த தண்டனை வழங்கி ஒட்டுமொத்த தமிழினத்தையும் தன் பால் ஈர்த்துள்ளார் ஒருவர். சட்டம் ஒழுங்கை சீரமைக்கவும், போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் காவல்துறையில் சேவையாற்றி வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்தான் அந்த ஈர்ப்புக்கு சொந்தக்காரர். அப்படி அவர் என்ன தண்டனை வழங்கிவிட்டார் என்பதுதானே உங்கள் கேள்வி. ஆம்.....தான் பணிசெய்யும் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை திருக்குறள் எழுத வைக்கிறார். இதுதான் அவர் கொடுக்கும் நூதன தண்டனை. இதை தண்டனை என்பதை விட விழிப்புணர்வுதான் என கூறவேண்டும். சிலர் அபராதம் செலுத்திவிட்டு செல்கின்றனர் திருவாரூர் புல்லவராயன்குடிக்காட்டை மாவட்டம் சேர்ந்தவர் நாவுக்கரசன். இவர் திருச்சி பெரம்பலூர் டவுன் போக்குவரத்து காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய போது இரு சக்கர வாகனத்தில் கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்காமல் அவர்களிடம் பேப்பர் பேனா கொடுத்து 10 திருக்குறளை எழுத சொல்லி நூதன தண்டனையை கொடுக்கிறார். 10 திருக்குறளையும் எழுத்துப் பிழை இன்றி எழுதினால் அபராதம் விதிக்கப்படுவதில்லை. அதோடு ஹெல்மெட் அணிவதன் மாணவர்களை நாவுக்கரசன். அவசியத்தைக் கூறி அனுப்பி வைக்கிறார். 10 குறளை எழுதாதவர்களுக்கு ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கிறார். இதில் சிலர் திருக்குறளை எழுதிக் கொடுத்துவிட்டு செல்கின்றனர். சிலர் அபராதம் செலுத்திவிட்டு செல்கின்றனர்.
|
|||||
by Kumar on 20 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|