LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

பிரான்சில் திருவள்ளுவருக்கு சிலை!

பிரான்சிலேயே முதல் முறையாக திருவள்ளுவரின் முழு திருவுருவச்சிலை செர்ஜி (Cergy) நகரத்தில் பிரெஞ்சிந்திய தமிழ் அமைப்பால் நிறுவப்பட்டுள்ளது.

 

தமிழர்களின் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகளால் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

 

புதுவையின் பொதுப்பணித்துறை அமைச்சர்

 

பிரான்சிலேயே முதன்முறையாக செர்ஜி நகரிலுள்ள பிரான்சுவா மித்ரான் பூங்காவில் (Parc François Mitterrand, Cergy Préfecture) ஐயன் திருவள்ளுவருக்கு முழு திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

 

வொரேயால் தமிழ் கலாச்சார மன்றத்தால் (Association Culturelle Des Tamouls De Vauréal) நிறுவப்பட்டுள்ள இந்த திருவள்ளுவர் சிலையை சனிக்கிழமையன்று (09/12/2023) புதுவையின் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் புதுச்சேரி அரசின் சார்பில் திறந்து வைத்தார்.

 

கொட்டும் மழையிலும்

 

இவ்விழாவில் செர்ஜி மாநகர தலைவர் ழான் போல் ழாந்தாம், புதுவை அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், புதுவை மேனாள் சட்டப் பேரவைத் தலைவர் வி.பி. சிவக்கொழுந்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன், குறும்பட இயக்குநர் ரவி குணவதி மைந்தன், இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதுவர் திரு. ஜாவேத் அஷ்ரப், மற்றும் புதுவையை சேர்ந்த சிற்பி பத்மஶ்ரீ திரு. முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் இவ்விழாவில் தமிழகத்திலிருந்து வந்திருந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

 

கொட்டும் மழையிலும் ஏராளமான பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் மற்றும் மாணவர்கள் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

 

சிலை திறப்பினைத் தொடர்ந்து, விழா அரங்கத்தில் மாணவ-மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பிரான்சின் முதல் திருவள்ளுவர் சிலை 

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வொரெயால் தமிழ் கலாச்சார மன்றத்தின் தலைவர் இலங்கை வேந்தன், செயலாளர் அலன் கிருஷ்ணராஜ், பொருளாளர் வேல்முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.

 

செர்ஜியில் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை தான் பிரான்சின் முதல் திருவள்ளுவர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

by Kumar   on 14 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு
சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும்  திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.