LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

எனைத்தானும் நல்லவை கேட்க : 2- பகுதி 2- குறலோடு உறவாடு - டாக்டர். சுப. திருப்பதி - அமெரிக்க நரம்பியல் நிபுணருக்கு ஆச்சரியமூட்டிய வள்ளுவர்

எனைத்தானும் நல்லவை கேட்க : 2- பகுதி 2- குறலோடு உறவாடு - டாக்டர். சுப. திருப்பதி - அமெரிக்க நரம்பியல் நிபுணருக்கு ஆச்சரியமூட்டிய வள்ளுவர்

ஆச்சரியமான அமெரிக்க நரம்பியல் நிபுணர்:

    திரு. சுப. திருப்பதி அவர்கள் நரம்பியல் துறைக்கு வந்த போது ‘இவரைப் போல் நரம்பியல் நிபுணராகத் தான் மாற வேண்டும்’ என்று ஒரு அமெரிக்க நரம்பியல் வல்லுநரை நினைத்திருக்கிறார். மேலும் திரு. சுப. திருப்பதி அவர்களுக்குத் திருக்குறளில் இயல்பாகவே அதிக ஈடுபாடு என்பதால் எதைப் பேசினாலும் அதில் திருக்குறளை மேற்கோள் காட்டி விடுவார். இதனை நரம்பியல் துறைக்கும் பயன்படுத்தியுள்ளார். இதனைக் கேட்ட அந்த பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஆச்சரித்துடன் திரு. சுப. திருப்பதி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

வாழ்க்கைக்கான திருக்குறள்:

    எந்தவொரு மனிதனும் தன் வாழ்நாளில் நிச்சயமாக 10 குறட்பாக்களுக்காவது எடுத்துக்காட்டாக வாழ்ந்திருப்பான். எனவே எந்தவொரு மனிதர் இறக்கும் போதும் அவருக்கு மலர்மாலை, பொன்னாடை அணிவிப்பதற்குப் பதிலாக அவர் வாழ்க்கையைக் குறிப்பிடுகின்ற 10 குறட்பாக்களை லேமினேசன் செய்து இறந்தவர் மேல் வைத்து அவரது குடும்பத்தார்க்குக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் திரு. சுப. திருப்பதி அவர்கள். இதனால் அவர் இறந்த பிறகும் கூட அந்த குறட்பாக்களால் உயிர் வாழ்வதாக அவரது குடும்பத்தார் நினைத்துக் கொள்வர். இது போல மற்றவரும் செய்ய முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறார்.

உளவியல் நோக்கில் திருக்குறள்:

    திருக்குறளை உளவியல் நோக்கில் பார்ப்பது இவருக்கு பிடித்தமான ஒன்று. திருக்குறளின் காமத்துப்பாலானது இன்றும் சரியான முறையில் வெளிப்படுத்தப்படவில்லை என்று கூறி வருத்தப்படுகிறார் திரு. சுப.. திருப்பதி அவர்கள். நன்றாக யோசித்தோமானால் காமத்தில் நாம் தேடுவது தாய்மையை. தாய்மையின் எச்சமும், மீதியும் தான் காமத்தில் தேடப்படுகின்றன. ஊடலானது மனிதனின் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்றும், அது எப்படி இருக்க வேண்டும் என்றும், அதனால் விளையும் நன்மை என்னவென்றும் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ஒரு தனி மனிதனின் வாழ்க்கையைத் திருவள்ளுவரை விட உளவியல் நோக்கில் யாரும் கூறவில்லை. உளவியல் வல்லுநர் சிக்மண்ட் பிராய்டுவை விடத் திருவள்ளுவர் சிறந்த உளவியல் வல்லுநர். நாம் அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முன்வர வேண்டும்.

சிந்தனைத் தெளிவு:

    எல்லா துறையில் இருப்பவர்களும் திருக்குறளைக் கற்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் திருவள்ளுவர் வெளிப்படுவார். சிந்தனைத் தெளிவு இருந்தாலே போதுமானது. தினமும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். தெளிவான சிந்தனையானது ஒரு வலிமையாகத் திகழும்.

by Lakshmi G   on 13 Oct 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு
சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும்  திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.