LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமையாசிரியர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை 25-11-2023 நடைபெறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட உள்ளன.

 

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், உலகத் தமிழ் வளர்ச்சி மன்றத்துடன் இணைந்து , தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 2,000 திருக்குறள் நூல்கள் வீதம் 80000 திருக்குறள் நூல்களை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் முதல்கட்டமாக 40000 திருக்குறள் நூல்கள் அனுப்பப்பட்டு (தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் +புதுச்சேரி , காரைக்கால்) , அந்தந்த மாவட்ட அரசு நிர்வாகத்தால் , தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள், மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆகியோரைக் கொண்டு வழங்கப்படுகிறது. 

அந்தந்த மாவட்ட உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் இதை நேர்த்தியாக செய்துவருகிறார்கள்.

 

அதன்படி செங்கல்பட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கதின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் 

வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி மற்றும் சென்னை, அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், உலகத் தமிழ் வளர்ச்சி நிர்வாகிகள் நேரில் கலந்துகொள்ள உள்ளனர்.

 

 

 

உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் செயல்பாடுகள்.......

 

>>மாவட்ட திருக்குறள் அமைப்புகளுடனும்'இணைந்து திருக்குறள் நூல்களை இலவசமாக வழங்குதல்.

 

>>இலவச முற்றோதல் பயிற்சி வழங்குதல்.

 

>>புரவலர்களை அடையாளம் கண்டு மாவட்ட அளவில் பகுதிநேர /முழுநேர ஆசிரியர்களை திருக்குறள் கற்றுக்கொடுக்க நியமித்தல்.

 

>>அரசு வழங்கும் ரூபாய் 15000 திருக்குறள் முற்றோதல் பரிசை , சான்றிதழைப் பெற மாணவர்களை அதிக அளவில் அனைத்து மாவட்டத்திலும் தயார்படுத்துதல்.

 

>>இதுவரை கடந்த 25 ஆண்டுகளில் 1330 திருக்குறளை முடித்தவர்கள் வாழ்க்கைத் தரத்தை ஆராய்ந்து அனைவரையும் இணையத்தில் வெளியிட்டு திருக்குறள் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தல் (சுமார் 1200 பேர்).

 

>>1330 திருக்குறள் முடித்து முற்றோதல் செய்தவர்களுக்கு "திருக்குறள்-இளநிலை " சான்றிதழ் வழங்குதல்.

 

>>திருக்குறள் பொருள் உணர்ந்து ,நேர்காணலில் கலந்துகொண்டு தெரிவு பெறுபவர்களுக்கு "திருக்குறள்-முதுநிலை" சான்றிதழ் வழங்குதல்.

 

>> திருக்குறள் இளநிலை ,முதுநிலை முடித்தவர்களை அறம் சார்ந்தவர்களாக் கருதி , அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வெளிநாட்டுப் படிப்பு, தொழில் வாய்ப்பு என அனைத்திலும் முன்னுரிமை வழங்கும் சூழலை ஏற்படுத்துதல்.

 

>>அனைவரும் திருக்குறளை வீடுகளில் குடும்பமாகக் கற்று ஒரு அறம் சார்ந்த ,அமைதியான, நிறைவான, மகிழ்ச்சியான வாழ்வியலை முன்னெடுத்து ஒரு முன்மாதிரி சமூகமாக தமிழ்ச்சமூகம் இயங்க துணைநிற்றல். என்று பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

உங்களுக்கு, உங்கள் பிள்ளைகளுக்கு, உங்கள் ஊருக்கு, மாவட்டத்திற்கு,நாட்டிற்கு திருக்குறளை முறையாக பயிற்றுவிக்க எங்கு செல்வது என்று இனி கவலை வேண்டாம்.. 

 

தகுதியான , தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் , ஒழுங்குசெய்யப்பட்ட பாடத்திட்டம், 30 ஆண்டுகளுக்கு மேல் திருக்குறளில் அனுபவம் கொண்ட ஆளுமைகள் குழு உள்ளது. அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

 

புரவலராக பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்

 

திருக்குறள் பற்றாளரா? திருக்குறள் ஆர்வம் கொண்ட தொழில்செய்பவரா? உதவ ஆர்வம் கொண்டவரா? உங்கள் மாவட்டத்திற்கு உரிய உதவியை செய்ய புரவலராக பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் .

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேர்த்தியாக ஒருங்கிணைப்பு செய்யும் திருக்குறள் எல்லப்பன் அவர்களின் தொடர்ச்சியாக அவரது பயிற்றகத்திலிருந்து உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட பயிற்சியாளர்களாக மாவட்டம் முழுதும் திருக்குறள் பரப்பும் முற்றோதல் ஆசிரியைகள் திருமதி.கற்பகவள்ளி , திருமதி.சிந்தாமணி ஆகியோரும், சென்னை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் திருக்குறள் பழனி அவர்களும் போற்றத்தக்கவர்கள். 

 

உலக திருக்குறள் முற்றோதல் இயக்கதின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் 

வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி,  

kural.mutrothal@gmail.com

by Kumar   on 23 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.