கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன். இது வரவு வேட்கையாற் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(இதுவுமது) கொண்கன் ஒருநாள் வருக- நீண்டநாளாக வராத என்காதலர் ஒரு நாள் தப்பாது என்னிடம் வருவாராக; பைதல் நோய் எல்லாம் கெடப் பருகுவன்- வந்தால், எனக்குத் துன்பஞ் செய்கின்ற இக்காம நோய் அடியோடு நீங்குமாறு; அவருடம்பாகிய அமிழ்தத்தை என் ஐம்புலனாலும் ஆசைதீரப் பருகி யின்புறுவேன். காதலர் வரின் இன்றுள்ள நோயும் இனிவரும் நோயும் ஒரே வேளையில் முற்றும் நீங்கிவிடும் என்பதாம். 'வருக', 'மன்' என்பவற்றிற்கு மேலுரைத்தவா றுரைக்க.
கலைஞர் உரை:
என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்.
சாலமன் பாப்பையா உரை:
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
கணவர்மட்டும் வந்துவிடட்டும், இந்த வேதனை மிகுந்த காம நோயும் அதை யொட்டிய எல்லாத் துன்பங்களும் ஒரே நாளில் ஒழிந்துபோகும்படியான மருந்தைக் குடித்துப் பரிகாரம் செய்து கொள்ளுகிறேன் பார்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இத்தனை நாட்களாக வாராத தலைவன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்தால் துன்பம் செய்கின்ற இந்த நோயெல்லாம் கெட அந்த அமிழ்தத்தினைப் பருகுவேன்.
Translation
O let my spouse but come again to me one day!
I'll drink that nectar: wasting grief shall flee away.
Explanation
May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.