உலக செஸ் சாம்பியன் போட்டியின் துவக்க விழா இன்று மாலை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. மாலை 4:00 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு, விழா சிறப்பு மலரை வெளியிட்டு, போட்டியில், யார் முதலில் விளையாடுவது என்பதை தேர்வு செய்ய உள்ளார்.
மேலும் தொடக்க விழா நிகழ்ச்சிகளாக, தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில், நாதஸ்வர இன்னிசை கச்சேரி, ஷோபனா கலைக்குழுவின் சதுரங்க நாட்டியம்,ஊர்மிளா சத்யாநாராயணா குழுவினரின் பரதநாட்டியம், வீணை காயத்ரி குழுவினரின் வீணை கச்சேரி, நார்வே நாட்டின் நாட்டிய நிகழ்ச்சி, ஆகியவை நடைபெற உள்ளது. அத்துடன் செஸ் வரலாறு, காணொளி காட்சி திரையிடப்பட உள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை, அண்ணாசாலையில் உள்ள, ஓட்டல் ஹயாத்தில், 9ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை, 12 சுற்றுகளாக நடைபெற இருக்கிறது. டைபிரேக்கர் போட்டி, 28ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.
|